சிறைப் பிடித்தச் சமுதாயத்தில் எத்தனை
கறைப் பிடித்த மனிதர்கள் அத்தனையும்
மலர்வது காலை மலரிலா ...?
முதல் பக்கத்தில் முற்றும் துறந்த
முனிவரின் சல்லாபங்கள்
அடுத்த பக்கத்தில் அரசனும் ஆண்டியானன்
அடுத்தவரின் மனைவிக்கு ஆசைபட்டதால்
நடு பக்கத்தில் நாட்டை உறுத்தும் செய்திகள்
சட்டை போட்டும் சரிபாதி காட்டும்
சினிமாப் படங்கள் ....
கட்டிலறையில் மனைவியை கொன்ற
கணவனின் பட்டியலிடும் காமலீலைகள் ....!
படித்தும் திருந்தாத பள்ளி சிறுவர்களின்
வாழ்க்கை தோட்டத்தில்
அபின் கஞ்சா நூழைந்ததால் காணாமல்
போகும் இளைஞர்கள் ...!
போதை போட்டு காரை ஒட்டியதால்
ஊரைவிட்டு போன குடும்பங்கள் ...!
பசி பட்டினி கொடுமையால்
உயிரை மாய்யித்த துருவங்கள் ....!
யார் என்ன சொன்னாலும் நான் செய்வேன்
என்ற பாலியல் மன்னனின்
மனதை உறுத்தும் பக்கங்கள் ...!
கடைசி பக்கத்தில் கடலும் பொங்கும்
கற்பிணியின் வயிற்றில் அதிசிய
குழந்தை ...
இப்படி சீர் கெட்ட சமுதாயம்
பட்டும் திருந்தவில்லை உடல்
கெட்டும் திருந்தவில்லை ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...