என் காதல் ...!

என் காதல்
சாதியால் பிரிந்த போது
சகித்துக்கொண்டேன்
அதே சாதி
சாக்கடையைப் போல் இன்று
நாறுவதால்
நான் பிழைத்துக்கொண்டேன் ...!

இனியாவது ஒரு விதி செய்வோம் ...!

பதவியைப் பிடிக்க
ஜெகத்தினை அழிக்கும்
ஈனப்பிரவிகளே
இலங்கையில் இருப்பவரும்
மனிதனென மறந்த 
மானங்கெட்ட மசுருகளே 
அடக்கு முறை ஆட்சியில்
அடமானம் வைத்த 
பிணம் தின்னி கழுகுகளே
இயேசு 
உயிர்த்தெழு முன் ஈழம் 
உயிர்ப்பரித்த ஓனாய்களே 
இனப்படுகொலைக்காக
ஈழ இரத்தம் குடிக்கும்
அசிங்கங்களே
நாமும் ஒரு நாள்
மனமதில் புழுகி 
மண் தனில் அழுகி 
மரணிப்போம் என்பதை மறந்து 
குறுக்குவழியில் காய் நகர்த்தும் 
குள்ள நரிகளே 
இனியாவது ஒரு விதி செய்வோம்
இயற்கைக்கு மாறாக 
இனி ஒரு மரணம் இல்லையென்று !

mhishavideo - 145