கருப்பு வெள்ளை புத்தகத்தில்
மெழுகுவர்த்தி வெளிச்சம்
எண்ணம் மாறி
வண்ணம் கலையாத
அதே நிறக் கண்கள்
மௌனங்கள் மட்டும்
கடந்த காலத்தை நோக்கி
பயணிக்கிறது
அங்கும் வானவில்லுக்கு பதிலாக
வறுமைதான் தெரிந்தது
திரும்பி வந்தேன்
திருப்பு முனையில்
முடிந்தது இளமையில் கல் !