தன்முனைக் கவிதைகள் நானிலு - 80

உசுரோடு விளையாடும்
காதலை ஒலிம்பிக்கில்
வைத்தால் நானே 
முதலிடம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 79

மேகத்தை வரைந்துவிட்டு
அதன் வண்ணத்தைத்
தேடினேன் அவளின்
கூந்தலில் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 78

நாலு காசு சம்பாதிக்க
நாளுக்கு நாள்
பொய் சொல்லுகிறார்
நல்ல சூனியக்காரி ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 77

காதல் கலவரத்தில்
உடல் கருகி
மணம் வீசுகிறது
சாதி மல்லி ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 76

அடித்து நொறுக்கப்பட்ட
சிலைக்கு உயிர்
கொடுத்தது
தடுத்து நிறுத்திய போராட்டம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 75

திருநெல்வேலி
அல்வாவைக்
கட்டிப் போட்டு இழுக்கிறது
சிட்டுக் குருவி லேகியம் !

mhishavideo - 145