பெண்ணினமே இல்லாமல் போகலம் ...!


காமம்
இங்கே கடலைப் போல்
விரிந்து கிடக்கிறது

கட்டி வைத்து உதைப்பதற்கும்
விட்டுக் கொடுத்து பிழைப்பதற்கும்
பட்டுவாட நடத்துகிறது அரசு

கைவசம் எல்லாம் இருந்தும்
வலை வீசி தேட தேவையில்லை
எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும்
ராணுவத்தை போல்
சுட்டுத்தள்ள ஏன் இன்னும் தயக்கம்

இனி பொம்மையில் கூட
பெண்ணினன் இல்லாமல் போகலம்
பொறுத்திருக்காதே பொங்கி எழு
சுனாமியைப் போல்

அன்று பிறக்கும்
ஆனினமே ஒன்றிருந்தால் அது
அன்பான, பண்பான ஒழுக்கமான
இனமென்று !

(வார மலர் ஏப்ரல் 7, 2019)

வார விடுமுறை ...!

வார விடுமுறை
வழக்கத்திற்கு மாறாக
குரைக்கும் நாய்
பதட்டத்துடன் எட்டிப் பார்க்கிறாள்
குடி போதையில் புலம்பும் 
எதிர் வீட்டுக்காரர்
சற்று தெளிந்த முகத்துடன்
திரும்புகையில்
விதவை கோலத்தில் தாய் !

புத்தகங்கள் !

என் 
அலைபேசி உரையாடலை
ஒட்டுக் கேட்டதால் 
விலைக்கு போடப்பட்டது
அந்த அறையில் 
அடிக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் 

சாதி ...!

சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி 
மதம் பார்த்து மூடுவதில்லை மண் 
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று
மொழி பார்த்து பேசுவதில்லை மழை
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன்
மனிதா 
நீ 
மட்டும் ஏன்
இத்தனையும் பார்க்க பழகிக்கொண்டாய் !  

(பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு)

அழகிய காடே

அழகிய காடே
அகமும் புறமுமாய் 
அசையும் கிளையே
பூத்து குலுங்கும் மலரே
புத்துணர்சி தரும் அருவியே
கிளிகள் பாட மயில்கள் ஆட
வேட்டையாடும் விலங்குகளுக்கு
வெளிச்சம் கொடுக்கும் சூரியனே
பழமோ காயோ 
பசித்துண்ணும்
பகலை படமெடுக்கும் 
நீர் வீழ்ச்சியே
குரல் வளையை 
அறுக்க கிறுகிறுக்கும் 
மூங்கில் காடே
முந்தான முகிலில் 
முகம் பார்க்கும் 
வானவில்லே
வரப்புக்குள்ளே 
வாய் சவடால் 
அடிக்கும் நாரையே
நடந்து ஓடும் 
விட்டில் பூச்சியின் 
விருந்தினமே
வளைந்து நெழிந்து
வான் நோக்கா
பாம்பினமே
இலைகள் சலசலப்பில்
இயற்கையாய் நீந்தும்
மீனவளே
தூரத்து ரயிலோசையில்
சடசடவென இறகு விரிக்கும்
பச்சிகளே
வில்லும் அம்பும் 
தைக்காத ஈரத்தில்
காதல் சுவடுகள் பதித்த 
மரம் கொத்தியே
ஆகா இவ்வளவு 
அழகான உன்னை 
இன்டர்னெட் உலகத்தில் 
கண்டு கழித்த யெனக்கு
இதயம் மட்டு எப்படி 
இயற்கையானது !

கோயில் மணியோசை ...!

ஒரே அலறல் சத்தம் கேட்டு எழுகையில் எனது ஹவுஸ் ஓனர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்தில் நால்வரும்  மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி கேட்டு சிறு புன்னகையுடன் கோயில் வாசலை நோக்கி விரைந்தேன் அங்கே சிலுவையில் அறைந்த கடவுளை கண்டு "பாவத்தின் சம்பளம் மரணம்" நிஜம் தான் என்பதை இன்று உணர்கிறேன்  தகப்பனே என்ன காலம் தான் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது என்று விட்டிற்கு வந்தாள் 
அங்கே அக்கம் பக்கத்தினர் அந்த விபத்தில் ஒருவர் 24 மணி நேரம் கெடுவில் இருப்பதாகவும் மற்ற இருவருக்கு தலையில் பலத்த காயம் அறுவை சிகிக்சை செய்ய இரண்டு லாசம் தேவை அடுத்து அவர்களுடன் வந்த சிறு குழந்தையும் மயக்கத்தில் இருக்கிறது எல்லாம் அவர்கள் செய்த பாவம் என பேசிக்கொண்டனர் 
இப்போது ஹவுஸ் ஓனரின் மகன் பணத்திற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான் இறுதியில் வீட்டை விற்க முடிவு செய்து பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் அங்கு அவன் மாமா 24 மணி நேர கெடு முடிந்து இருந்துவிட்டார் கொண்டு சென்ற பணத்தில் 2.5 லட்சம் கட்டி பாடியை அடக்கம் செய்தான்
அடுத்து அவனின் அம்மா மற்றும் அக்கா இருவருக்கும் அறுவை சிகிக்சை செய்ய 2.5 லட்சம் கட்டிவிட்டு வெளியில் அமர்ந்தான் டாக்டர் வந்து ஸாரி நங்கள் முயற்சி செய்தும்  பலன் அளிக்கவில்லை இருவரும் உயிர் துறந்தனர் இந்த  பாடியை வாங்க 5 லட்சமும் அத்துடன் குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் செலவு 50 ஆயிரத்தையும் சேர்த்து காட்டுங்கள் என்றதும் பணத்தைக் கட்டி இறுதிச்சடங்கை முடித்தான் எல்லாவற்றிற்கும் காரணம் அவள் கொடுத்த சாபம் தான் இதற்குமேலுமா அவள் கடனை கொடுக்க வேண்டும்  கூடாது என யோசிக்கையில் 
வீட்டின் பேரில் கடன் கொடுத்தவர்கள் வந்து 3 மதம் அவகாசம் கொடுத்தார்கள் அவனும் சரி என்றான்
இரண்டும் மாதம் கடந்தது அந்த பணக்காரர் பேசிய தொகை போக மீதி பணத்தை கொடுத்தார் அதில் கொஞ்சம்  பணம் குறைவாக இருந்தது ஏன் என கேட்டதும் நீ வாங்கியக் கடனை கொடுத்துவிட்டேன் நீ ஏமாற்றியது போல் நானும் அவர்களை ஏமாற்ற தயாராகவில்லை இந்த வீட்டை காட்டி தானே கடன் வாங்கினாய் அதான் நானே அந்த கடனை அடைந்துவிட்டேன். ஏனா  எங்கள் தலைமுறையாவது நல்லா இருக்க வேண்டுமே அதற்கு தான். இன்னும் ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்துவிடு என பேசி திரும்புகையில் அவனது முடிவை அமோதிப்பது போல தூரத்தே கோயில் மணியோசை கேட்டது. 

mhishavideo - 145