கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: |
உடைந்தது கன்னிக்குடம் |
உடையாத நீர்க்குமிழி |
குழந்தை .... |
சீம்பால்
குடிக்கும் சிசுவின்
|
பசிக்கு தாயின் மறு பிறவி ... |
அழியா அட்சைய பாத்திரம் ! |
தாலாட்டு பாடும் தாயின் |
தியாகத்தில் பிறக்கும் |
தந்தையின் முதலெழுத்து ... |
அள்ள அள்ள குறையாத |
அறிவு பெட்டகம் ! |
புது குமிழி சூட்டில் |
மழைத்துளியாய் சிரிக்கும் |
மருமகள்... தலைமுறை |
பொக்கிஷத்தின் தாய்மடி ! |
பேரனோ பேத்தியோ வென |
ஏங்கும் பெற்றோருக்கு |
தாத்தா பாட்டியின் சொத்து ... |
உடைந்த மனதை ஊக்குவிக்கும் |
தியாகத்தின் முடிவுரை ! |
தளர்ந்த தாய் தந்தைக்கு |
வளர்ந்து ஆளாகும் |
மகனின் கைப்பிடிப்பு |
கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் ! |
மண்ணில் மக்கும் உடலும் |
சொக்கும் அழகும் என்றுமே |
உடையும் நீர்குமிழியென |
உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் ! |
உடையாத_நீர்க்குமிழி
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கைவிரல் ...!
காதலியின் |
உருவம் வரைந்தேன் |
உயிர் கொடுத்தது |
கண்ணீர் துளிகள் |
துடைக்க முயலுகிறேன் |
இனித்தது கைவிரல் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
குருவிக் கூடு ...!
காற்று வந்து |
குறி சொன்னதும் |
அய்யோவென |
உதிரும் கிளைக்கு |
அடைக்கலம் கொடுத்தது |
குருவிக் கூடு ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பக்கத்து வீட்டு ரோஜா செடி !
முறிந்த காதலியின் |
முகத்தை நினைவு |
கூறுகையில் |
அதிர்வில்லா "அலைபேசியா " |
வருகையில்லா "வாட்ஸப்பா " |
டூவிட்ட "டுவிட்டரா " |
முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
வளர்ந்து விட்டது |
பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
முறிந்த காதலியின் |
முகத்தை நினைவு |
கூறுகையில் |
அதிர்வில்லா "அலைபேசியா " |
வருகையில்லா "வாட்ஸப்பா " |
டூவிட்ட "டுவிட்டரா " |
முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
வளர்ந்து விட்டது |
பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி சிறப்பிதழ் - 2016
செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
மண் குதிரை |
ஏறி இறங்கியது |
சிறுவர் மனசு ...! |
தாண்டுவதற்குள் |
நீண்டுகொண்டே செல்கிறது |
வறுமை ...! |
கோரைப்புல் |
மினுமினுக்கிறது |
பனித்துளி ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் அலை ...!
முதல் அலை |
முத்தமிட்ட |
ஈரம் காய்வதற்குள் |
இழுத்து வருகிறது |
இன்னொரு பேரலையை |
அடக்கி முத்தமிடுவதற்குள் |
அழித்துவிட்டது |
எதோ ஒரு கால் தடம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விவசாயி மட்டும் ...!
பணப் பட்டு வாடா |
பால் பாக்கெட் போடும் முன்னே |
பாங்க் வாசலில் கூட்டம் |
அன்று |
கருவில் இருக்கும் குழந்தைக்கு |
சீட் வாங்க |
வரிசையில் நின்றான் |
இன்று |
பிறந்த குழந்தைக்காக சேமித்த |
பணத்தை மாற்ற |
வரிசையில் நிற்கிறான் |
அட மதிகெட்ட சமூகமே |
ஓசிக்கும் வரிசை |
காசுக்கும் வரிசை |
ஆனால் |
எந்த வாரிசுமே இல்லாமல் |
விவசாயி மட்டும் |
வரிசை வரிசையாக |
உயிரை இழக்கிறான் |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணன் பாட்டு ...!
கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் |
எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ |
தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை |
தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா ! |
எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை |
அமைதி காத்திட நீயருள்வாயோ ! என |
சொல்லி புலம்பிட வரவில்லை நான் |
சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா |
பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை |
பக்தராய் மாற்றிட மனமில்லையோ என |
கேள்வி கேட்டிட வரவில்லை நான் |
கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா |
கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் |
சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ |
எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ |
எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பரிசாக கொடுக்க ....!
நினைவையெல்லாம் |
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் |
நம் பதிவு திருமணமன்று |
பரிசாக கொடுக்க .... |
பயனளிக்காமலே பயன் பெற்றது |
பக்கத்து வீட்டு பெண்ணுடன் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - நவம்பர் 2016 !
புகை மூட்டம் |
நடுக்கத்துடன் |
இளங்குஞ்சு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
கசக்கி எறிந்த குப்பையில் |
சிரிக்கிறது |
அழகு ஓவியம்...! |
அளவற்ற உலகம் |
அளந்தே வைத்தான் |
வயிற்றை ....! |
காட்சி தரும் கடவுள் |
ஆசி வழங்கும் பிச்சைக்காரன் |
கட்டண சலுகை ...! |
செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு.' |
கதவுகளற்ற வாசல் |
மூடிச் செல்கிறது |
மனஅழுத்தம்...! |
சாலை வியாபாரிக்கு |
வாசம் வீசுகிறது |
காகித பூ ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எங்க குல தெய்வமே ...!
குலசாமி திருவிழா இங்கே |
கூடியிருப்போருக்கு ஓர் விழா |
வானம் படியா போனவுங்களையும் |
வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
மண்ணும் பொண்ணாக |
மக்கள் பஞ்சம் காணாது |
நின்னு நிதானமாய் |
நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
வேட்டைக்கு போய் வரும் |
வீரகுல கருப்பனே .. உனக்கு |
உண்ணும் படையலிட்டு |
உருமி மேளம் குலவையிட்டு |
கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
காத்து நிற்கும் கருப்பனே |
நல்வாக்கு சொல்லுமையா |
வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
ஓலப்பாயில் சோறு குவிச்சு |
எல்லைக் காத்த அய்யனாருக்கு |
எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
உண்ணா விரதமிருந்து |
ஊருக்கே பந்தியிட்டு |
ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
கரகாட்டம் ஒயிலாட்டமென |
கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
காக்கும் மாடனே உனக்கு |
காவு கொடுக்கும் சாமத்துல |
குறி கேட்க வந்தோமையா எங்கள் |
குறையெல்லாம் தீர்த்துவையும் |
எங்க குல தெய்வமே ...! |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஞாபகம் ...!
உனக்கும் எனக்கும் |
நடந்த சூர சம்ஹாரத்தில் |
காதல் என்ற வாழ்க்கை |
மட்டும் தான் அழிந்தது |
ஆனால்இன்னும் |
உயிர் பெற்றுக்கு கொண்டே தான் |
இருக்கிறது ஞாபகம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியு,
தாண்டுவதற்குள் |
நீண்டு கொண்டே செல்கிறது |
வறுமை ...! |
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...