சரும மாற்றம் |
உருவ மாற்றம் |
கண்ட பொழுதிலும் |
காதல் மாற்றம் மட்டும் |
கடுகளவு கூட |
மாறவில்லையே |
ஏன் ....? |
இதற்கு
பெயர் தான்
|
கடவுள் |
மாற்றமோ ....! |
கடவுள் மாற்றமோ ....!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நீயோ நீயோ ...!
மல்லியும் கனகாம்பரமும் |
சேர்ந்து மணக்கையில் |
முகர்ந்து பார்த்து |
கூச்சலிட்டேன் |
முத்தமிட்டது நீயோ என்று |
உரசும் மஞ்சள் தான் அரச்சு |
உஷ்ணம் தனை நான் மறக்க |
உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் |
வருடிவிட்ட தென்றலாய் |
புல்லரிக்க வைத்தது நீயோ என்று |
ஏழு கடல் தாண்டி |
எல்லை மீறாது |
நினைவுகளை தட்டியெழுப்பி |
விட்டு செல்லும் |
செல்போன் சிணுங்களின் மூலம் |
ஏமாற்றி போனது நீயோ என்று |
இன்று வரை |
நீயோ நீயோ என்று |
எனக்கான |
ஏக்கங்கள் குறைந்து கொண்டே |
போனாலும் |
உனக்கான வாசிப்புகள் |
அதிகரித்துக் கொண்டு |
தான் இருக்கிறது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என்னிடமிருந்து ...!
தினமும் ஏதாவதொரு |
தண்டனை கொடுக்க |
வேண்டுமென்று |
கவிதை புனைகிறேன் |
புனைந்த கவிதையையே |
பனையமாக வைத்து |
தப்பித்துக்கொள்கிறாய் |
என்னிடமிருந்து ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இனிப்பான காதல் ...!
கசப்புகளை மட்டுமே |
உட்கொண்டு |
என் இதயத்தில் |
சர்க்கரை நோய் வருவதற்கு |
காரணம் இனிப்பான |
உன் காதலோ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மதியார் காதலை நினையாதே ?
நீ |
என்னை |
தூக்கி எறிந்துவிட்ட போதும் |
அவ்வப்போது |
தூக்கி நிறுத்தும் |
நினைவுகளுக்கு என்ன தெரியும் |
மதியார் காதலை நினையாதே என்று ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஆழமான கவிதை ...!
அவளின் நினைவுகள் |
என் |
இதயத்தில் |
சூடு வைக்கும் போதெல்லாம் |
சுருக்கமின்றி பிறக்கிறது |
ஆழமான கவிதை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - ஜூலை 2016 !
கூறுவைத்த பூவில் |
கொட்டிக்கிடக்கிறது |
கணக்கில்லா வாசம் ...! |
நாற்காலிக்குள் |
ஓடி ஒளிந்து கொண்டது |
ரத்தம் குடித்த மூட்டை பூச்சி ...! |
கோரைப் புல் |
மினுமினுக்கின்றது... |
பனித்துளிகள் ! |
காலத்தின் விதியை |
எண்ணிக்கொண்டிருக்கும் |
கைரேகை ஜோசியன் ...! |
வர்த்தகத்திலும் வணிகத்திலும் |
கொட்டிக்கிடக்கிறது |
கணித வளம் ...! |
காற்றின் உராய்வில் |
மெய்சிலிர்க்கும் |
போதிமரங்கள் ! |
அடிமரத்திலிருந்து |
எட்டிப் பார்க்கிறது |
ஒரு துளிர் ! |
உடைந்த பாலம் |
ஒப்பனை செய்யும் |
தவளைகள் ! |
கோபுர தரிசனம் கிடைத்தும் |
யாசகம் கேட்கும் |
காம்பறுந்த பூக்கள் ...! |
கூடைக்குள் பழங்கள் |
முகர்ந்து திரும்பும்... |
பறவைகள் ...! |
ரசித்துக்கொண்டிருந்தேன் |
பசுந்தளிரை நசுக்கியபடி |
காட்டெருமை! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கீற்று மின்னிதழ் - வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016
வண்ணப் புடவையாக வானவில் |
உடுத்திக்கொண்டாள் |
வனதேவதை ! |
ஆழ்துளை கிணற்றில் |
நீச்சலடிக்கிறது |
நிலா ! |
அழுது முடிப்பதற்குள் |
சமாதானமடைந்து விட்டேன் |
அம்மாவின் தாலாட்டு ...! |
மகுடம் சூட்டிய |
பனி மழை |
உருகிவழியும் ஆறு |
தட்டிகொடுத்த நெற் கதிர்கள் |
வளருவதே இல்லை |
விவசாயி ! |
பிச்சைக்காரன் தட்டில் |
நிரம்பிவழியுது |
பாவமூட்டை ! |
குளத்தில் நிலா |
தூண்டில் போடுகிறது |
கடிகார முள் ! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் மரியாதை ...!
எத்தனையோ |
கதாபாத்திரங்களை |
கடந்து வந்த |
எனக்கு |
என்னுடைய கதாப்பாத்திரம் |
எதுவென்று |
உணரவைத்தது |
அந்த முதல் மரியாதை ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்னொரு தாய் ....!
வயதானாலும் |
இளமையாய் தோன்றும் |
காதலை |
சினிமாவில் மட்டுமே |
என்பதை மாற்றி |
இளமையிலேயே முதுமையின் |
காதலை உணர வைப்பவள் |
இன்னொரு தாய் ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஞாபகத்தோடு சேர்த்து வயதும் ....!
மறக்க வேண்டும் |
என்று |
ஒவ்வொரு படியாக |
இறங்குகிறேன் |
ஏறிக் கொண்டே போகிறது |
ஞாபகத்தோடு சேர்த்து |
என் வயதும் ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்றைய நாளிதழ் ...!
கறந்த பாலை விட |
சுத்தமான என் |
காதலை உன்னிடம் |
சொல்வதற்குள் |
பல காரணம் சொல்லிப் |
பிரித்தது |
இன்றைய நாளிதழ் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உன் காதல் ...!
திடப்பொருளாக இருந்த |
என் |
இதயத்தை |
திரவப் பொருளாக மாற்றியது |
உன் காதல் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வெற்றி உன்வாசம் ...!
ஆ போட பழகும் போது |
அடிகள் பல வாங்கினேன் |
அத்தனையும் |
வெற்றிப் படிகளாக மாற |
உன் வசம் தான் உள்ளது |
என்றாள் அம்மா .... |
நடை பழகும் போது |
விழுந்து விழுந்து அழுதேன் |
இந்த தழும்புகள் எல்லாம் |
ஓர் நாள் இரும்பாகும் |
என்பதை |
உணர்த்தினார் அப்பா |
இரண்டையும் இன்று |
இணைத்துக் காட்டினேன் |
வெற்றிக்கும் தோல்விக்கும் |
இடையில் இருப்பது |
வெறும் |
இயலாமையே என்று ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
"இளமையில் வறுமை"
பாவாடை சட்டையிலிருந்து |
தாவணிக்கு மாறினேன் |
அக்காவின் பழமை எனக்கு |
புதுமையாக காட்சியளித்தது |
கிழிந்த கோனார் நோட்ஸ்யை |
மலிந்த விலையில் வாங்கி |
பொழிந்த முகத்துடன் படிக்கையில் |
அங்கே குறித்துவைத்திருந்த குறிப்புகள் |
முக்கியமாக காட்சியளித்தது |
எண்ணிரண்டு வயதைக் கடந்து |
எங்க ஊர் கல்லூரிக்கு செல்கையில் |
பக்கத்து வீட்டு அக்காவின் |
பழைய சுடிதார்கள் எனக்கு |
சரியாக பொருந்தும் போது |
இன்னொரு அக்காவாக காட்சியளித்தது |
இரவல் படிப்பை முடித்து |
இளைப்பாறும் தருணத்தில் |
இறந்த அப்பாவின் வேலை |
இரவலாக கிடைத்தப் போது |
இன்னும் இனிக்கிறது |
வறுமையை விட வாலிபம் |
மிகவும் கொடுமையை என்று ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூலை 2016.
அடுத்தடுத்து விழும் இலை | |
சுமையானது | |
மழை நீர் ...! | |
முகம் கழுவாமல் | |
அகம் மலர்கிறது | |
நீர் நிலைகளில் நிலா ...! | |
பூக்கும் முன் | |
வாசம் வீசி செல்லும் | |
மொட்டுகள் ...! | |
சுருங்கிய முகம் | |
விரிந்து கிடக்கிறது | |
முதுமையின் காதல் ! | |
சொத்து குவிப்பு வழக்கு | |
சட்டப்படி குவிகிறது | |
சொத்துக்கள் ...! | |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...