அருகில் உள்ள வரை ...!


நீயாய் நின்றிருந்தேன்
என் நெஞ்சில் ....!

நானாய் சென்றிருந்தேன்
உன் கண்ணில் ...!

தானாய் வந்ததை நீ
தேனாய் மாற்றாமல்

ஊனாய் மாற்றி என்னை
உயிராய் திரிப்பது
காதல் தானோ ....?

அதை
உன் கண்ணில் கண்டால்
கடலாய் விரிந்திடுவேன்
காற்றாய் நுழைந்திடிவேன்

என்று சொல்வதை விட
அன்பாய் பிறந்திடுவேன்
உன் அருகில்
நான் உள்ளவரை ...!

1 comment:

  1. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145