எடை போடாதே .....!


எல்லாம் எடை போட்ட
மனிதா உன்
எண்ணத்தை எடை
போட்டாயா ?

சொல் !
விதியோடு விளையாடும்
எண்ணத்தில்

விடையொடு நடமாடும்
சோகத்தை எடை
போட்டாயா?

அதில் !
சுமையாய் கரையும்
கண்ணீரில் கழுவும்
பாவத்தை எடை
போட்டாயா ?

இல்லையேன்
பின் எதற்கு
எடை போடுகிறாய்
கீழ் ஜாதி மேல் ஜாதி
என்று !

மனிதா !
மடமையை திறந்து
மகிமையின் உயிரை
பறை சாற்ற
பாரில் யாவரும்
ஒன்றே

வாழும் உயிர்கள் இரண்டே
என வாழப்பழகுங்கள்
நாமும் வளருவோம்
நம் நாடும் வளருமே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145