தீபாவளி வாழ்த்துக்கள் ...!


அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே

கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு

முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு

வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்
**************************
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி

துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர
இந்த ஹிஷாலீ யின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145