முடியல் முற்றம் ...!


பத்தில் வேராகி பாசத்தில் நூறாகி
தத்துப் பிள்ளையாய் தவிக்கவிட்டவன்

விதை நிலத்தின் நிழலை மறந்து
விலை நிலத்தின் வேரில் மயங்கி

தன் நிலத்தை வளர்க்க தாய் நிலத்தை
தவிக்க விட்டாயே

பதறிய நெஞ்சம் பதில் சொல்லும்
என் பறை சாற்றும் பாவம்

ஓர் நாள் உன் பாசக் கயிற்றில்
தூக்காய் தொங்கும் போது

விழுதுகள் இல்லா மரம்போல்
வேரை இழந்து விடியலை தேடுவாய்
உன் முடியலின் முற்றத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145