கண்ணால் பேசுவது
கவிதை அல்ல
உன் முன்னால்
பேசும் போது
ஊமையாக நிற்கிறேனே
அது கவிதை
கட்டை விரலால்
கோலம் போடுவது
கவிதை அல்ல
நம் காதலின் ஆழம்
தெரிந்து
உன் கைபிடிக்கிறேனே
அது கவிதை
வாரி அணைக்கும்
வார்த்தைகள்
கவிதை அல்ல
உன் வாழ்க்கையில்
வளர்வதும் தேய்வதுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...