அசிங்கத்தின் அடிமையாய் படிக்கட்டில் |
அடைகாக்கும் மிதியடிகள் |
ஏற்றத்தாழ்வில்லா பண்பு |
மண்ணிற்கு உரமாகும் மீன்விழி |
மற்றொரு உயிருக்கு பூவிழியாய் |
கண் தானம் |
முட்டாள் மாணவனையும் |
விருது படைக்கும் துருப்பு சீட்டு |
குருவணக்கம் |
ஆர்பரிக்கும் உயிருக்கு |
அடைக்கல உயிர் ஓவியம் |
இரத்த தானம் |
பல வண்ணங்கள் |
சேர்ந்து பேசும் ஓவியம் |
ஒருமைப்பாடு |
பகலின் முடிவாய் விழித்திருக்கும் |
நிலாவெள்ளி |
தியாகத்தின் திருப்புமுனை |
பொதி சுமந்த கழுதை |
சலவை கருவியில் சங்கம் |
ஒற்றுமையிலும் வேற்றுமை |
உதிரத்தின் சீற்றம் |
விதி முடிக்கா உயிரின் ஜெனனம் |
இரத்த தானம் |
ஜெனிக்கும் இதயத்தில் |
கணிக்கும் மருந்தாய் |
இரத்த தானம் |
விரலின் மாற்றத்தில் |
விசித்திர அழகிகளாய் |
அறுவடை நகங்கள் ...... |
பிறக்கிறேன் இறக்கிறேன் |
இருந்தும் புன்னகை பூவாய் |
சிரிக்கிறேன் முள்ளைகண்டு |
சுரக்கும் மாதங்கள் பத்தானாலும் |
பிறக்கும் பால் ....... |
அமிர்தமாகும் அன்னை மடியில் |
தொடும் வானமாய் |
தொலைகிறேன் நிழலில்லா |
கல்லறையில் நிம்மதியை தேடி |
எண்ண இயந்திரத்தில் |
எழுதுகோலின்றி இயற்றும் |
நிழல் படம் கனவு |
உயிராய் உரமாய் |
உலா வரும் உருவங்கள் |
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது |
ஒரு பிடி மண்ணில் |
பிச்சை போடும் உரமே |
பசியின் பாவயாத்திரை |
இருளின் இருட்டறையில் |
இதயம் உறங்கா |
நித்திரையே தூக்கம் |
களிமண்ணில் கலைநயம் |
கற்கும் கைகள் தஞ்சையில் |
தலையாட்டு பொம்மை |
தர்மங்கள் பல செய்தால் |
கருமங்கள் மறைந்து |
கண்ணீர் சிறக்கும் |
வளைக்க முடியவில்லை |
சுருட்ட முடியவில்லை இருந்தும் |
நிழலாகிறது வானம்பார்த்த பூமி |
ஹிஷாலீ ஹைக்கூ - 5
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...